Thursday, 25 September 2014

மின்சாரமும் சூரிய ஆற்றலும்-கோபி செல்வம்.


அன்புள்ள விவசாய நண்பர்களே, 
             வணக்கம்.
             கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். நெல் அறுவடை செய்ய நவீன இயந்திரம் வாடகைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, 
கோபி செல்வம் ,
கோபிசெட்டிபாளையம்-
(1)9842715325 
(2)9487151983

     சூரிய ஆற்றல்! இன்றைய தேவைக்கு பயன்படுத்துங்க! 
          வருங்கால மனித வாழ்க்கை முழுக்க முழுக்க எரிசக்தியை நம்பியே இருக்கப்போகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை, தற்போது நடைமுறையில் உலக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற பெட்ரோலியம். நிலக்கரி. இயற்கை எரி வாயு முதலியவை இன்னும் சில காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.  அதன்பின் அவை காலியாகிவிடும்.  என்றைக்குமே காலியாகாத வற்றாத சக்தியை தேட வேண்டிய கட்டாயத்தில் மனித குலம் இன்றைக்கு உள்ளது.  அந்த தேடலில் மிக முக்கியமான ஆற்றலாக சூரிய ஆற்றல் சற்றே பிரபலமடைந்து வருகிறது.
 இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.
              சோலார் பவருக்கு அடுத்தபடியாக இருப்பது காற்றாலை மின்சார உற்பத்திதான்.வீடுகளின் மொட்டை மாடியிலேயே சிறிய டவர்கள் மூலம் ஒரு நாளில் 24 மணி நேரமும், ஆண்டு முழுவதும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்பது காற்றாலையில் சாதகமான விஷயம்.

             சாதாரணமாக காற்றில் இலைகள் அசையும் வேகத்தில் காற்று வீசினாலே இந்த மின் இயற்றி தானாகச் சுற்றத் தொடங்கிவிடும். அதாவது, காற்றின் வேகம் மிதமாக இருந்தாலே போதும். (நிமிடத்திற்கு 3.1 மீட்டர்)  அதேபோல இந்த மின் இயற்றியை இயக்குவதற்கு என்று தனியாக மின்சாரம் செலவிடத் தேவையில்லை. காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாக இயங்கி தானாகவே நிற்கும் ஆற்றல் கொண்டது. சூரிய சக்தி, காற்று சக்தி இரண்டும் சேர்ந்த கலவை என்பதால் எந்த பருவ நிலையிலும் நமக்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்''

         எதற்காக சூரிய சக்தி ?

      முதல் விசயம் இது என்றைக்குமே தீர்ந்து போகாது.
       நிரந்தர ஆற்றல் மூலமாக நம்பிக்கையுடன் கையாள முடியும்.

      ஒரு முறை அமைப்பதற்கு மட்டுமே செலவாகுமேயன்றி உற்பத்தி செலவு சிறிதும் இல்லை.

  இலவசமாகவே வெப்பமாகவோ. மின்சாரமாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

  எந்தவித கழிவுகளையும் உருவாக்காத பசுமை ஆற்றல்.  எனவே சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது,

  இதையெல்லாம் விட முக்கியமான விசயம் சூரிய சக்தி மின்சக்தி தகடுகளின் (Photovoltaic Cells) ஆயுட்காலம் 25 வருடங்களுக்கும் மேல். 

               சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலை இரண்டு வழிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தலாம், ஒன்று மின் ஆற்றலாக மாற்றி இயந்திரங்கள மற்றும் மின் விளக்குகளை இயக்குவது,  இரண்டாவது வெப்ப ஆற்றலாக ஹீட்டர். குக்கர் முதலிய உபகரணங்களில் நீரை சூடாக்கி உணவை வேகவைக்க பயன்படுத்துவது,  இதில் மின் ஆற்றலாக மாற்றுவதே மிகச் சிறந்த வழி,  இதுதான் வரும் காலங்களில் மிகவும் பிரபலமடையும் 
(1) சூரியசக்தி தகடுகள் (Solar Photovoltaic Cells)
      இவை சூரிய ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றக் கூடியவை.
   (2) மொனோ க்ரிஸ்டலின் தகடுகள் (Mono Crystalline Panels)
செமி கண்டக்டர் (Semi Conductor Ex-Silicon)  என்று சொல்லப்படும் சிலிகனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது.இவை நேர் (DC) மின்சாரத்தை மட்டுமே வழங்குபவை.(3) பாலி க்ரிஸ்டலின் தகடுகள் ( Poly Crystalline Panels) 
         இதுதான் இன்று எல்லா இடங்களிலும் பெரும்பாலும்  பயன்படுத்தப்படுகின்ற சோலார்      பேனல்கள்.இதுவும் சிலிகனை அடிப்படையாகக் கொண்டுதான்   தயாரிக்கப்படுகிறது.  இவை 3 வாட் முதல் இன்று 245 வாட் வரை ஒரே பேனல்களாக தயாரிக்கப்படுகிறது.  இதை ஒரு கிரிட்(GRIT) கொண்டு இணைத்து மிக அதிக பட்ச மின் உற்பத்தியாக 600 மெகாவாட் வரை குஜராத்தில் சாதித்து காட்டி விட்டனர். எனவே சூரிய சக்தியிலிருந்து மின் உற்பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் இத்தகைய சோலார் பேனல்களைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியும்.  இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் தைரியமாக முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய முடியும்.  இதை சரியான மின் பகிர்மான வசதிகளை அமைத்து அனைவருக்கும் விநியோகிக்கவும் முடியும்,  ஒவ்வொரு வீடுகளிலும் தேவைக்கேற்ப சூரிய மின்உற்பத்தி தகடுகளை நிறுவி அவரவர்களே உற்பத்தி செய்து கொண்டால் மின் ஆற்றல் தட்டுப்பாடு என்றுமே வராது.


(4)CIGS சோலார் தகடுகள் ( CIGS Solar Panels)
                    சூரிய ஒளி மின் உற்பத்தியில் மிக முக்கியமான லேட்டஸ்ட் (2012) தகவல்  இந்த CIGS பேணல் கண்டுபிடிப்பே. இவை  சாதாரண பாலி கிரிஸ்டலின் தகடுகளை விட 17 % வரை அதிக மின் உற்பத்தியை அதே ஒளியில் தர கூடியது. எனவே காலை 7 மணியிலிருந்தே மின் உற்பத்தி தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து குறைந்த சூரிய ஒளி செறிவிலும் மின்சாரம் உற்பத்தி ஆவது இதன் சிறப்பு. இவை காப்பர், இன்டியம், கேலிய்ம், (டை) செலனைடு தனிமங்களை கொண்டு தகுந்த உற்பத்தி முறைகளால் உருவாக்கபடுகிறது. இவை பாலி கிறிஸ்டலின் பேனல்களை விட 20% விலை அதிகம் என்றாலும் 25 வருடம் மின் உற்பத்தி திறனில் வெற்றிகரமான பேனலாக இருக்க போகிறது. இன்றைய நிலையில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த திறனுள்ள, அதாவது  60 வாட் முதல் 1000 வாட் வரை இந்த வகை  பேனல்களே மிகவும் சிறந்தவை என்பது எனது கருத்து.  இதை தயாரிப்பது சற்று சிரமமான விஷயம். ஏனென்றால் இதிலுள்ள அணைத்து தனிமங்களும் அதிக கடின தன்மை கொண்டவை. இதிலுள்ள செலினியம் வெளிச்சத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் குறைந்த ஒளியிலும் சிறப்பாக செயல்படுகிறது.
                 நிரந்தரமான மின் உற்பத்திக்கு பேருதவியாக இருக்கப் போவது சூரிய ஒளி மின்சாரமே அனைவரும் வாங்கும் எளிய விலையில் என்னால் கொடுக்க முடியும் என்று உறுதியாக கூறுகிறேன்.  வெறும் 5 ஆயிரத்தில் தொடங்கி (10 Watt). 1.50,000- ரூபாய் (600 Watt) வரை அனைத்து தேவைகளுக்கும் அவரவர் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ள முடியும்.அந்தந்த வீடுகளில் கிடைக்கும் DC சூரிய ஒளி மின்சக்தியை அங்கேயே பயன்படுத்துவதால் ஆற்றல் இழப்பு மிக மிக குறைவே.  ஆகவே சூரிய ஒளி மின் அமைப்புகளில் DC மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் (LED Bulbs) . மின் விசிறிகள் (DC FAN) மற்றும DC  ஏர் கூலர்கள் (AIR COOLER WITH DC MOTOR) முதலியவறறை பயன்படுத்துவதே புத்திசாலித்தனமேயன்றி ஏற்கனவே உங்களிடம் இருக்கும் AC மின்சாரத்தில் இயங்கும் விளக்குகள். மின் விசிறிகளை பயன்படுத்தினால் தேவையற்ற ஆற்றல் வீணடிக்கப்படுவதோடு. அதற்கான மின் உற்பத்தி சாதனங்களுக்கு அதிகமான முதலீடும் தேவைப்படும்.  வணிக ரீதியாக DC யில் இயங்கும் மின் விசிறிகள் பல மாடல்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன, மிக உயர்ந்த தரத்தில் LED விளக்குகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் முழு உருவம் கொடுக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

ஆழ்துளை கிணற்றுக்கு எந்த மோட்டார்? -கோபி செல்வம்.

அன்புடையீர் வணக்கம்.
               கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நெல் அறுவடை செய்ய நவீன இயந்திரம் வாடகைக்கு தொடர்பு கொள்ள ,கோபி செல்வம்
 (1)9842715325 
(2) 9487151983
கோபிசெட்டிபாளையம்

ஆழ்துளை கிணற்றுக்கு எந்த வகை மோட்டார் சிறந்தது?

        பொதுவாக வீடுகளின் நீர்தேவை குறைந்த அளவே 2000 லிட்டர் முதல்  5000 லிட்டர் வரை  இருப்பதால் வீட்டு ஒரு முனை  மின்சாரத்தில் (Single Phase) இயங்கும் மோட்டார்களே போதுமானது. இவை தற்போது மூன்று முக்கிய வடிவமைப்பில் கிடைகின்றன. அவை,
  1. ஜெட் பம்புகள் ( JET PUMPS)
  2. கம்ப்ரசர்கள்  (COMPRESSORS)
  3. நீர் மூழ்கி மோட்டார்கள்   ( SUBMERSIBLE PUMPSETS)      இவற்றில் நீர்மூழ்கி மோட்டார்களே சிறந்தது.
 

நீர்மூழ்கி போர்வெல் பம்புகள் : (Bore well Submersible Pump sets)

                  இவை நவீன மின்- இயந்திரவியல்( Electro-Mechanical) தயாரிப்புகள். அதாவது குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி மிக அதிக நீரை இறைப்பதோடு எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக இயங்குவது மற்றும் மிக அதிக ஆழம் வரை 1000 அடிக்கும் கீழிருந்து நடைமுறையில்  நீரை இறைக்கும் ஒரே தொழில்நுட்ப பம்புகள் இவை மட்டுமே. இவை 1990 க்கு பின் சற்று பிரபலமாகி இன்று அணைத்து இடங்களிலும் திறம்பட செயலாற்றி வருகின்றன.

தேர்ந்தெடுப்பது எப்படி ?

                 இவற்றை தேர்ந்தேடுப்பதில்தான் நிறையபேர் தவறு செய்கின்றனர். 250 அடியில் நீர் கிடைக்கும் போர்வெல்லில் 500 அடி ஆழம் வரை  வேலை செய்யும் பம்புகளை பொருத்தி விடுகின்றனர். நடைமுறையில் இது விற்பனையாளர்கள் செய்யும் தவறேயன்றி வாங்குபவர் தவறல்ல . இதனால் பாதியளவு நீரை மட்டுமே பெற முடியும். மின்சாரமும்  விரயம், அதிக  தொடக்க முதலீடும் தேவையற்ற விரயம். யாருக்கும் இது சம்பந்தமான தொழில்நுட்ப அறிவு இன்னும் மேம்படவில்லை. சரியான மோட்டாரை தேவையான ஆழத்தில் நிறுத்தி நீரை இறைக்கும் போது இரு மடங்கு மின்சாரம், நேரம், மிச்சமாகும்.
  * போர்வெல்லின் மொத்த ஆழம்?   
  *  எத்தனை அடியில் தண்ணீர் நன்றாக வந்தது?   
  *  நீர் எத்தனை அடி வரை மேலே வந்து நிற்கிறது?      
  *ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் நீர் தேவை?   
  *அடுக்குமாடி குடியிருப்பென்றால் அது எத்தனை மாடி?   
  *கிடைக்கும்  மின்சாரம் சிங்கிள்  பேஸா    அல்லது    திரி பேஸா? ( Single or Three  phase current)  

              போன்ற  தகவல்களை தெரிந்து  கொண்டு அதற்கேற்ற  மிகச் சரியான மோட்டாரை தேர்வு செய்யவேண்டும் .

                                   சமீபத்தில் நவீன தொழில்நுட்பத்தில்  ஒரு ஹச். பி. (1 HP) மோட்டார் ஒன்றை நான் வடிவமைத்துள்ளேன். அது 200 அடி உயரம் வரை வேலை செய்வதோடு நிமிடத்திற்கு 100 லிட்டர் நீரை இறைத்து விடும். அதே போர்வெல்லில் தவறாக 1.5 HP யில் 500 அடி வரை வேலை செய்யும் மோட்டார்  பொருத்தி 350 அடிக்கு கீழ்  மோட்டார் இருந்தாலும்  நிமிடத்திற்கு வெறும் 45 லிட்டர் நீர் மட்டுமே கிடைக்கும். இந்த மோட்டார்  விலையும் இரண்டு  மடங்கு அதிகம் . அதிக விலை கொடுத்து மோட்டார் வாங்கி குறைந்த நீரை இறைப்பது எந்த விதத்தில் புத்திசாலித்தனம்? வீடுகளுக்கான போர்வெல் மோட்டார்கள் ஒவ்வொரு குதிரைத் திறனிலும் 120-க்கும் அதிகமான மாடல்கள் உள்ளதால்  தேர்வு செய்யும் போது இந்த துறையில் தேர்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

சப்மர்சிபில் மோட்டார் அமைக்கும் விதம் :-

           சரியான ஆழம் வேலை செய்யும் மோட்டாரை தேர்வு செய்து U PVC பைப் 
சரியான கிரேடு ( A,B,C Grades ) வலுவுள்ளதை வாங்கி தகுதியான ஆட்களை கொண்டு நிறுவ வேண்டும். மிக முக்கியமாக  காற்று வால்வையும், NRV எனப்படும் ஒரு வழி வால்வுகளையும் சரியான இடத்தில் பொறுத்த வேண்டும்.இல்லையென்றால் மோட்டார் ஓடி நிற்கும்போது நீர் திரும்ப வந்து மோட்டார் பம்பை  ரிவர்ஸில் சுழற்றுவதால் த்ரஸ்ட் பேரிங் (Thrust Bearing) பழுதடைந்து மோட்டாரின் ஆயுள் குறைவதோடு தேவையில்லாத பராமரிப்பு செலவையும் கொடுத்து விடும்.

1000  அடி வரை  நீர்மூழ்கி மோட்டாரை  அமைத்து இயக்கலாமா  ?

        நிலத்தடி நீர் மட்டம்  சில இடங்களில் அதல பாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில்  1000 அடிக்கும் கீழே மோட்டாரை பொருத்தி தண்ணீரை இறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
             மோட்டார் திறனை பொறுத்த வரை 1200 அடி வரை நீரை இறைக்கும் மோட்டாரை கூட என்னால் உருவாக்கித்   தர  முடியும்.அதாவது 10 HP திறனில் 50 ஸ்டேஜில் வடிவமைத்தாலே அது 1200 அடி வரை வேலை செய்யும்.அது ஒரு விசயமேயில்லை.

                    கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
                       1000 அடி உயரம் செங்குத்தாக நிற்கும் குழாயில் வேகமாக மேல்நோக்கி சென்று கொண்டிருக்கும் நீர் ஒவ்வொரு முறையும்  திடீரென மோட்டார் நிற்கும் போது எந்த தடையுமின்றி புவி ஈர்ப்பு விசையினால்  கீழ்நோக்கி பாய்ந்து  உருவாக்கும்  நீர்ம அழுத்தம்  (Hydraulic sudden force or Water hammering) நீர்முழ்கி பம்பின்  மேல் பகுதியில் உள்ள இம்பெல்லர்( Impeller) மற்றும் சுழலும் தண்டின் (Center Shaft) மீது தாங்க முடியாத அடியை ( 60 to 200 kgf/cm2) கொடுப்பதால் இம்பெல்லர் உடைவதுடன் தண்டும் வளைந்து (Shaft bend) விடுகிறது.இதனால் அடிக்கடி மோட்டார் பழுது ஏற்படும். அதே நேரம் 1000 அடிக்கும் கீழுள்ள மோட்டாரை கழற்றி மாட்டுவதும் எளிதான வேலையல்ல.மோட்டாரின் விலையும் பராமரிப்புச் செலவுகளும்  மிக அதிகம்.அதே நேரம் சிறிய விட்டமுள்ள வயரில் (Submersible cable 2.5, 4 or 6 sq mm ) 1000 அடிக்கும் மேல் மின்சாரத்தை கொண்டு செல்லும் போது மின் இழப்பு (Voltage loss) அதிகமாவதால் அடிக்கடி காயில் சூடேறி வைண்டிங் பழுதடையும்.

            எனவே  அத்தியாவசியமான குடிநீர் தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும்   600 அடிக்கும் கீழே மோட்டாரை இறக்கி இயக்குவது அதிக பராமரிப்பு செலவுகளை கொடுப்பதோடு புவியியல் சமநிலையை பாதிக்கும்  நிலத்தடி நீரினை உறிஞ்சுவதால் மிக  மோசமான விளைவுகளை உருவாக்கிவிடும்.எனவே  முடிந்தளவு இதனை  தவிர்ப்பது நல்லது. இன்னொருபுறம் பார்த்தால்  நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்றி வருங்கால சந்ததியினரான உங்கள் பேரன்,பேத்திகளையாவது  நினைத்து அவர்கள் குடிப்பதற்கேனும் கொஞ்சம் நல்ல தண்ணீரை விட்டுச்செல்லும்  உன்னத முடிவாகவும் இது  இருக்கும்.

பாரம்பரிய பண்ணைக் கருவிகள்-கோபி செல்வம்.

அன்புடைய விவசாய நண்பர்களே,
           வணக்கம்.கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.நம்ம விவசாயிகள் பயன்படுத்திய பண்ணைக்கருவிகள் பற்றி தெரிந்துகொள்வோம். 
 நவீன இயந்திரத்தால் நெல் அறுவடை செய்ய தொடர்பு கொள்ளுங்க,
கோபிசெல்வம்-
கோபிசெட்டிபாளையம் 
மொபைல் எண்கள்
 (1)9842715325
 (2)9487151983


அ. கரும்பு
1. கரும்பு பாத்தி போடும் கலப்பை
2. கரும்பு கரணை வெட்டி
3. சர்க்கரை தேய்க்கும் முட்டி
4. கர்க்கரை தேய்க்கும் உரவரை
5. கரும்பு வெட்டி
6. வெட்டரிவால்
7. சமட்டி
8. சர்க்கரை சொரண்டி
9. மர சொரண்டி
10. சல்லடை
11. பகோட்டி கட்டை
12. சக்கை தாளி
13. சாம்பல் கரண்டி
14. சக்கை தல்லும் கவாய்
15. தாங்கி
16. சாறு எடுக்கும் டிரம்
17. சக்கைப்பரப்பி
18. சக்கை வடிகட்டி
19. இரும்பு வாலி
20. பெரிய கொப்பரை
21. சின்ன கொப்பரை
22. வெல்ல அச்சு
23. கரும்புத் தோகை வெட்டி
ஆ. நெல்
25. கட்டி உடைக்கும் சமட்டி
26. பரம்படிப் பலகை
27. கை பலகை
28. பல்லு பலகை
29. கூட் பலகை
30. கருக்கரிவால்
இ. மஞ்சள்
31. மஞ்சள் ஊன்றும் கொத்து
32. இரும்பு கலப்பை
33. மமட்டி
34. களைக் கொத்து
35. மஞ்சள் வெட்டும் கொத்து
36. மஞ்சள் வெட்டும் கொத்து
37. மஞ்சள் வெட்டும் கொத்து
38. சின்னக்கூடை
39. மக்கிரிக் கூடை
40. மஞ்சள் அண்டா
41. களைக்கொத்து
ஈ. நிலக்கடலை
42. களைக்கொத்து
43. காராசட்டி
44. இரும்புப்பெட்டி
45. சானைக்கூடை
46. சல்லடை
உ. எள்ளு
47. பாத்தி போடும் கலப்பினி
48. அரிவாள்
ஊ. இதர இயந்திரங்கள்
49. கடப்பாறை
50. உலக்கை
51. செக்கு
52. ஆட்டுக்கல்
53. வாய்ப்பொட்டி
54. தட்டு நறுக்கி
55. இரும்புமுரம்
56. மூங்கில் முரம்
57. கோடாரி
58. மமட்டிக் கொத்து
59. தாலி
60. இரும்புக் கொடுவால்
61. ஆரிய கல்
62. அம்மி
63. கொடப்பு
64. சுத்தி
65. மத்து
66. சர்க்கரை காய்ச்சும் அடுப்பு
69. கடை ஆனி
70. படி
71. வல்லம்
72. சொரை
73. ராத்தல்
74. சல்லைக் கத்தி

என அன்பன் 
கோபி செல்வம்-
கோபி செட்டிபாளையம்.

நெல் அறுவடைக்கு நவீன இயந்திரம் வாடகைக்கு-கோபிசெல்வம்.

அன்புமிக்க விவசாய நண்பர்களே,
    வணக்கம். கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். 
 இன்றைய காலத்தில் விவசாயம் செய்ய நவீனமுறையை கையாள வேண்டிய கட்டாயம்தாங்க! நெல் அறுவடை செய்ய நவீன இயந்திரத்தேவைக்கு தொடர்பு கொள்ளுங்க,
 கோபி செல்வம் 
கோபிசெட்டிபாளையம்
அலைபேசி எண்கள்
(1) 9842715325 மற்றும் 
(2) 9487151983
 




 நவீன தெளிப்பு பாசனம் பாருங்க.





  நாற்று நடவு செய்வதைப் பாருங்க!













 நெல் அறுவடை குறித்த நேரத்தில் செய்ய அணுக வேண்டிய தொடர்பு முகவரி
கோபி செல்வம் அவர்கள் 
அலைபேசி எண்கள்
(1) 9842715325 மற்றும் 
(2) 9487151983
 கோபிசெட்டிபாளையம் 
ஈரோடு மாவட்டம்.

விவசாய கருவிகளின் பயன்பாடு & வளர்ச்சி - கோபி செல்வம்.

அன்பார்ந்த விவசாயிகளே,
                வணக்கம்.  கோபிசெல்வம் வலைப்பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய இயந்திரங்கள் படங்களைப் பாருங்க!.இவை நம்ம ஊரில் இல்லைங்க!.வெளிநாடுகளில்...1700 களிலிருந்து வெவ்வேறு பரிணாம வளர்ச்சி கண்டுள்ள விவசாய கருவிகள் இவை......
   



  மேலே கண்டுள்ள படம் 1849 களில் மனித சக்தியால் அறுவடைக்கு பயன்படுத்திய இயந்திரம்.





 மேலே காண்பது குதிரைகளின் சக்தியால் அறுவடை செய்ய பயன்படுத்திய இயந்திரத்தின் படம்

 குதிரைகளின் சக்தியால் அறுவடை பாரீர்

























 நெல் அறுவடை செய்ய  எங்களைத் தொடர்பு கொள்ள
  மொபைல் எண்கள் 
 (1)9842715325   (2)9487151983 
கோபிசெட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம்.

நடவு இயந்திரம் பாருங்க! கோபி செல்வம்.

அன்பார்ந்த விவசாயப் பெருமக்களே,
                    வணக்கம். 
                  கோபிசெல்வம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். இதோ வேளாண்மைக்கான இயந்திரக் கருவிகள் தயாரிக்கும் விவசாயிகளின் சாதனை! 
நெல் அறுவடை செய்ய தொடர்பு கொள்ள ,கோபிசெல்வம் 9842715325மற்றும் 9487151983கோபி செட்டிபாளையம் விவசாயிங்க!

 கோனோவீடர்… குழிக் கருவி… நடவு இயந்திரம்

                       வேளாண் கருவிகள், விவசாய வேலைகளை எளிதாக்குவதற்காகத்தான். ஆனால், பல சமயங்களில் அவை வேலைகளுக்கு இடைஞ்சலாகவும் உருவெடுத்துவிடுவது உண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அத்தகையக் கருவிகள் ஓரங்கட்டப்பட்டு, தேமே என்று தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால், கோதண்டம் போன்ற விவசாயிகளின் கைகளில் கிடைத்தால்… தேவைக்கேற்ப அவை மறுவடிவம் எடுத்துவிடும். ஆம்… தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை, முன்னோடி விவசாயி கோதண்டம், வேளாண் பணிகளுக்காக சின்னச்சின்னக் கருவிகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். அதேபோல, எப்படிப்பட்ட கருவியாக இருந்தாலும், அவை விவசாயத் தேவைக்கு நூறு சதவிகிதம் பயன்படும் வகையில் மாற்றி அமைப்பதிலும் கில்லாடி. இதன் மூலமாகவே, இப்பகுதி விவசாயிகளிடம் இவர் பிரபலமும்கூட! ஒரு பகல்பொழுதில் கோதண்டத்தை அவருடைய நிலத்தில் சந்தித்தபோது, ”நான் 20 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். முழுநேர விவசாயியாக இருப்பதோடு… இயந்திரங்கள் தொடர்பான விஷயங்களில் சின்ன வயதிலிருந்தே ஆர்வம் உண்டு என்பதால், வேளாண் கருவிகளை, வெற்றிகரமாக என்னால் மறுஉருவம் கொடுக்க முடிகிறது. இடையில், போர்வெல் குழாய்களுக்கு ‘சிலாட்டர் பாயிண்ட்’ போடும் நிறுவனத்தை நடத்தியிருக்கிறேன். அந்த அனுபவமும் இதற்குக் கைகொடுக்கிறது” என்று உற்சாகமாக சொன்னவர், தொடர்ந்தார்.

  தொடர்புக்கு,கோதண்டம், செல்போன்: 90421-70460
குழிபோடும் கருவி!
”நெல் அறுவடைக்குப் பிறகு, ஈரமான மண்ணில் பருத்தி, சோயாபீன்ஸ் விதைப்பு செய்வது விவசாயிகளின் வழக்கம். இதற்கு ஆள் வைத்துதான் குழி போடுவார்கள். வேலையாட்கள், கூர்மையான குச்சியால் வரிசையாக குழி போட்டுக் கொண்டே செல்வார்கள். இது மிகவும் சிரமமான வேலை. இடைவெளியும் துல்லியமாக இருக்காது. நேரமும் அதிகமாகும். மனித உழைப்பு வீண்விரயம்தான். இதற்கு மாற்றாக, எளிய முறையில ஒரு கருவியை உருவாக்கினேன். இதை நிலத்தில் தள்ளிக் கொண்டே சென்றால், ஒரேசமயத்தில் இரண்டு வரிசைக்குக் குழி போடும்.
சக்கரத்தைச் சுற்றியும் 42 டிகிரி சாய்வாக கம்பி இதில் இருக்கின்றது. இதுதான், தலா 5 அடி இடைவெளியில் குழிகளைப் போடும். கம்பி செங்குத்தாக இருந்தால், வெளியில் வரும்போது குழியைப் பெயர்த்துக் கொண்டு வந்துடும். அதனாலதான் சாய்வாக அமைத்துள்ளேன்.
குழிகளுக்கு இடையேயான இடைவெளி நிரந்தரமானது. தேவைக்குத் தகுந்த மாதிரி இந்தக் கருவியில் மாற்றம் செய்ய முடியாது. ஆனால், வரிசைக்கு வரிசை உள்ள இடைவெளியை மாற்றி அமைக்கலாம். சக்கரத்தை நகர்த்தி, போல்ட் மற்றும் நட்டைத் திருகிக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஒன்றரை அடி, அதிகபட்சம் இரண்டரை அடி இடைவெளியில வரிசை அமைக்கலாம். இன்னும் அதிக இடைவெளி தேவை என்றால், சக்கரங்கள் சுழலக்கூடிய அச்சுக் கம்பியை, தகுந்தாற்போல நீளமாக மாற்றிக் கொள்ளலாம்.
குழி போடுகிற கம்பியின் நீளம் 4 அங்குலம். இது நிலத்தில் அதிகபட்சம் மூன்று அங்குல, ஆழத்துக்குக் குழி போடும். இயந்திரத்தின் மேல் பகுதியில் அதிக கனமுள்ள மரக்கட்டைகள்… மணல் முட்டைகள் வைத்தால், 3 அங்குல ஆழத்துக்குக் குழி கிடைக்கும். கனத்தைக் குறைத்தால், குறைவான ஆழமுள்ள குழிகளைப் போடலாம். தேவையைப் பொருத்து இப்படி செய்துகொள்ளலாம். இந்தக் கருவியை உருவாக்க 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது. இதைப் பயன்படுத்தி, ஒரே நாளில் 2 ஏக்கர் வரைக்கும் குழி எடுக்கலாம். வேலையாட்களைப் பயன்படுத்தினால், ஒரு ஏக்கருக்குதான் குழி எடுக்க முடியும். இதற்கே 2,500 ரூபாய் செலவாகும்” என்றார்.

குறுவைக்கு ஏற்ற நடவு இயந்திரம்!
நாற்று நடவு செய்யும் கருவியில் கோதண்டம் செய்துள்ள மாற்றம், இப்பகுதி விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைப் பற்றியும் பேசியவர் ”நாற்று நடும் கருவி மூலமாக, 10 முதல் 12 அங்குல இடைவெளியில்தான் குத்துகள் அமைக்க முடியும். இது, சம்பா நடவுக்கு சரியாக இருக்கும். ஆனால், குறுவை என்றால், நெருக்கமாக நடவுசெய்தாக வேண்டும். காரணம், 100-110 வயதுடைய குறுகிய கால நெல் ரகங்கள்தான் குறுவையில் பயிரிடுவோம். இவை, குறைவான எண்ணிக்கையிலேயே தூர் வெடிக்கும். ஒரு குத்துக்கு சராசரியாக 9 தூர்கள்தான் வெடிக்கும் (இதுவே சம்பா என்றால், ஒரு குத்துக்கு 20-25 தூர்கள் வெடிக்கும்). குறுவையில் மகசூலும் குறைவாகவே இருக்கும். அறுவடை சமயத்தில் மழை பெய்து மகசூல் இழப்பு ஏற்படும். இதையெல்லாம் ஈடுசெய்வதற்காக குத்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆனால், நடவு இயந்திரத்தில் இதற்கான வாய்ப்பு இல்லாததால், குறுவையில அதைப் பயன்படுத்த விவசாயிகள் விரும்புவது இல்லை. நான் வாங்கிய நடவு இயந்திரத்திலும், இதே பின்னடைவுதான். என்னிடம் இதை விற்பனை செய்த நிறுவனம், ‘இதை மாற்றி அமைக்க முடியாது’ என்று கையை விரித்துவிட்டது.

நானே களத்தில் இறங்கி மாற்று ஏற்பாடு செய்துவிட்டேன். குறுவைக்கு ஏற்ற வகையில நெருக்கமாக நாற்று நடவு செய்ய, பிரத்யேக மான பல் சக்கரங்களை உருவாக்கினேன். இதை நாற்று நடும் கருவியில் பொருத்தினால், 4 அடி இடைவெளியில குத்துகள் அமையும். இந்த சக்கரங்களை உருவாக்க… சுமார் ஆயிரம் ரூபாய்தான் செலவு பிடித்தது. குறுவைக்கு மட்டும் இந்த சக்கரங்களைப் பயன்படுத்துகிறேன். சம்பாவுக்கு, ஏற்கெனவே கருவியில் இருந்த பல் சக்கரங்களைப் பொருத்திவிடுவேன்” என்று சொன்னார்.
சேற்றில் புதையாத கோனோ வீடர்!
கோனோ வீடர் எனும் களைக்கருவியும், இவர் கைப்பட்டு, தன் பிறவிப் பயனை அடைந்திருக்கிறது. ”வழக்கமாக, கோனோ வீடர் கருவியில் உள்ள சக்கரம் 6 அங்குல விட்டத்தில்தான் இருக்கும். அந்தளவுக்கு சக்கரம் சிறியதாக இருந்தால், சேற்றைக் கிளற முடியாமல் அடிக்கடி சிக்கி கொள்ளும். அதனால்தான் 18 அங்குல விட்டமுள்ள சக்கரம் அமைத்துள்ளேன். இதை மிக எளிதாக, பயிருக்கு நடுவே உருட்ட முடியும். சேற்றிலும் சிக்காது. பயிரையும் தொந்தரவு செய்யாது. பொதுவாக சக்கரத்தில் உள்ள பிளேடுகள் செங்குத்தாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். நான் சாய்வாக அமைத்துள்ளேன். களைகள் அடர்த்தியாக இருக்கும் இடத்தில், கோனோ வீடரை பின்னோக்கி இழுத்தோம் என்றால், களைகளை அப்படியே முழுமையாக அறுத்துக்கொண்டு வந்துவிடும். கடினமான இறுகிய மண்ணையும்கூட அடியோடு கீறிக் கிளறிவிடும். கோனோ வீடரை முன்னோக்கித் தள்ளினால்… களைகளும் மண்ணும் தரையோடு தரையாக அழுந்திவிடும். இதை உருவாக்க, 2,500 ரூபாய் செலவாயிற்று” என்ற கோதண்டம்,

பலே பர்மா செட்!
”நடவுக்கு முன் மண்ணை சமப்படுத்துவதற்காக நுகத்தடியில், ‘பர்மியர் செடோன்’ (மக்கள் வழக்கத்தில் ‘பர்மா செட்’) என்ற கருவியைப் பொருத்தி, மாடுகள் மூலமாக இழுப்பார்கள். வழக்கமாக, இரண்டரை அடி அகலம் கொண்டது இக்கருவி. இதன் உருளை, 10 அங்குல விட்டத்தில் இருக்கும். தடிமனான இரும்புப் பட்டை மற்றும் கனமான உருளைகள் என்று பயன்படுத்துவதால், இதன் எடை 15 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும். பள்ளமான பகுதிகளில் பயன்படுத்தும்போது அமிழ்ந்து, புதைந்துவிடும். விட்டம் பெரிதாக இருப்பதால், மண்ணையும் சேற்றையும் அதிகமாகக் கிளறி, முட்டு முட்டாக ஒதுக்கி வைத்துவிடும்.
இந்தப் பிரச்னைகளையும் நானே சரி செய்துவிட்டேன். நான் உருவாக்கி இருக்கும் ‘பர்மியர் செடோன்’, பல வகைகளில் சிறப்பானது. ஏழரை அடி அகலம், 6 அங்குல விட்டம் கொண்டது. கனம் குறைவான உருளை, மிகமெல்லிய இரும்புப் பட்டை என்று பயன்படுத்தி இருக்கிறேன். இக்கருவியின் மொத்த எடையே 10 கிலோதான். கன்றுக்குட்டி கூட இதை இழுக்கும். பள்ளமான பகுதிகளில் புதையாது. மேற்பரப்பு மண் மற்றும் சேற்றை மட்டும் லாவகமாக இது சமப்படுத்தும்” என்று பெருமிதமாகச் சொன்னவரை, பெருமையோடு பார்த்தபடியே விடைபெற்றோம்.
தொடர்புக்கு: 
கோதண்டம், செல்போன்: 90421-70460, 
ஜோதிராமலிங்கம், தொலைபேசி: 0435-2454414
         நன்றிகள் பல...பசுமைவிகடன் பத்திரிக்கைக்கு..Pasumai Vikatan+ Habibu,Trichy

எளிமையாக களை வெட்டும் இயந்திரம்- கோபி செல்வம்.



எளிதாக நெல் அறுவடை செய்வதை பாரீர்-கோபி செல்வம்.

நாற்று நடவு இயந்திரம் காணீர்-கோபி செல்வம்

நெல் அறுவடை செய்ய அழைக்கவும்.


 ஸ்ரீபாரியூர் அம்மன் நெல் அறுவடை இயந்திரம் - கோபி செட்டிபாளையம்.

  அன்பார்ந்த விவசாய பெருமக்களே,
                 வணக்கம்.கோபி செல்வம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.உங்களுக்குத்தேவையான நெல் அறுவடை இயந்திரங்கள் வாடகைக்கு எங்களிடம் கிடைக்கும்.தரகர் தேவையில்லை.நேரில் தொடர்பு கொண்டால் நாங்களே தங்களை அணுகி அறுவடை செய்து கொடுக்கிறோம்.


எங்களிடம் நெல் அறுவடைக்குத் தேவையான KARTAR 3500 G என்னும் 'கத்தார்' உயர் ரக அறுவடை இயந்திரம் உள்ளன. தங்களுக்கு  குறித்த நேரத்தில் கிடைக்கும்.தேவைக்கு கீழ்கண்ட தொடர்பு எண்ணுக்கு அணுகவும்.
          என 
           அன்புடன் 
                 கோபி செல்வம்-
         (விவசாயி)
கோபிசெட்டிபாளையம்-
ஈரோடு மாவட்டம்.
மொபைல் எண் ; +91 98427 15325 
                            +91 94871 51983